பைக் மீது லாரி மோதி விபத்து - ஒருவர் பலி, 2 பேர் படுகாயம்

எட்டையபுரம் அருகே பைக் மீது லாரி மோதிய விபத்தில் ஒருவர் உயிரிழந்தார். 2பேர் படுகாயங்களுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Update: 2024-03-01 07:34 GMT

உயிரிழப்பு 

தூத்துக்குடி மாவட்டம், எட்டையாபுரம் அருகில் உள்ள தெற்கு செமப்புதூர் கிராமத்தைச் சேர்ந்தவர் பேச்சியப்பன் மகன் மாரிமுத்து (50). எட்டு நாயக்கன்பட்டியைச் சேர்ந்த சூசை மைக்கேல் மகன் மரிய சபரி அன்னமுத்து (37), ஜேசுராஜா மகன் மைக்கேல் (27) ஆகிய 3பேரும் ஒரே பைக்கில் எட்டயபுரத்தில் இருந்து சுரக்காய்பட்டி கிராமத்திற்கு சென்று கொண்டிருந்தனர். அப்போது எதிரே வந்த டிப்பர் லாரி இவர்களது பைக் மீது மோதியதில் 3பேரும் பலத்த காயம் அடைந்தனர்.

இதையடுத்து 3பேரும் எட்டையாபுரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு சிகிச்சை பலனளிக்காமல் மாரிமுத்து இறந்தார். இந்த சம்பவம் குறித்து எட்டையபுரம் இன்ஸ்பெக்டர் முருகன் வழக்குப் பதிந்து லாரியை ஓட்டிவந்த கோவில்பட்டி கீழ பாண்டவர்மங்கலம் கிராமத்தை சேர்ந்த முத்து மகன் முருகன் (34) என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Tags:    

Similar News