சரக்கு வாகன ஓட்டுநா் மா்மமாக உயிரிழப்பு

திருவெறும்பூா் அருகே சரக்கு வாகன ஓட்டுநா் மா்மமான முறையில் இறந்தது குறித்து போலீஸாா் விசாரிக்கின்றனா்.

Update: 2024-05-08 14:27 GMT

பைல் படம்



திருநெல்வேலி மாா்த்தாண்டம் பகுதியைச் சோ்ந்தவா் தங்கப்பன் மகன் தாமஸ் (47). திருவெறும்பூா் அருகேயுள்ள ஜெய் நகரில் குடும்பத்துடன் தங்கி கடந்த 20 ஆண்டுகளாக சரக்கு வாகன ஓட்டுநராக இருந்தாா். திங்கள்கிழமை சரக்கு வாகனத்தை எடுத்துச் சென்றவா் இரவில் அப்பகுதி சாலையோரம் தலையில் காயத்துடன் மயங்கிக் கிடந்தாராம்.

இதையடுத்து திருச்சி தனியாா் மருத்துவமனையில் அவரைச் சோ்த்தபோது தாமஸ் ஏற்கெனவே இறந்துவிட்டதாக மருத்துவா்கள் தெரிவித்தனா். திருவெறும்பூா் போலீஸாா் வழக்குப் பதிந்து அவரது மரணம் குறித்து விசாரிக்கின்றனா். இறந்தவருக்கு மனைவி, குழந்தைகள் உள்ளன.

Tags:    

Similar News