திண்டிவனத்தில் லாரி கவிழ்ந்து விபத்து

திண்டிவனத்தில் லாரி கவிழ்ந்து நடந்த விபத்துக் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

Update: 2024-07-01 12:05 GMT
திண்டிவனத்தில் லாரி கவிழ்ந்து விபத்து
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தில் இருந்து கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் நோக்கி பிளைவுட் பலகைகளை ஏற்றிக் கொண்டு லாரி ஒன்று புறப்பட்டது. லாரியை செஞ்சி அடுத்த வேலந்தாங்கல் பகுதியை சேர்ந்த சோமநாதன் (வயது 45) என்பவர் ஓட்டினார். இந்த லாரி திண்டிவனம் சந்தைமேடு ரவுண்டானாவில் வந்து கொண்டிருந்தபோது, டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இருப்பினும் இந்த விபத்தில் சோமநாதன் காயமின்றி அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினார். இந்த விபத்து குறித்து ரோஷணை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதனால் சிறிது நேரம் அங்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
Tags:    

Similar News