இரட்டைமலை சீனிவாசன் பிறந்தநாள் விழா!

தூத்துக்குடியில் பறையர் பாதுகாப்பு பேரவை சார்பில் இரட்டைமலை சீனிவாசன் பிறந்தநாள் விழா நடைபெற்றது.

Update: 2024-07-09 07:29 GMT

சீனிவாசன் பிறந்தநாள் விழா

பட்டியலின மக்களின் உயர்வுக்காக உலக அரங்கில் குரல் எழுப்பிய வரும், ஒருங்கிணைந்த சென்னை மாகாண சட்டப்பேரவையின் உறுப்பினராக 15 ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றிய ராவ் பகதூர் இரட்டை மலை சீனிவாசன் 165வது பிறந்த நாள் விழா தூத்துக்குடியில் தமிழ்நாடு பறையர் பாதுகாப்பு பேரவை சார்பில் போல்டன்புரம் 2வது தெரு மாவீரன் சித்திரைவேல் திடல் இரட்டைமலையார் நினைவு தூண் அருகில் அலங்கரிக்கப்பட்ட அவரது புகைப்படத்திற்கு பேரவை நிறுவனதலைவர் புலி.செ. இளவரசபாண்டியன் தலைமையில் மாலை அணிவித்து புகழ் வணக்கம் செலுத்தப்பட்டது. தொடர்ந்து ஏழை, எளிய மாணவ மாணவியர்களுக்கு நோட்டு, புத்தகம் வழங்கப்பட்டது. இந்நிகழச்சியில் தூத்துக்குடி வடக்கு மாவட்ட பறையர் பாதுகாப்பு பேரவை மாவட்ட செயலாளர் மாடசாமி, மாவட்ட இளைஞரணி செயலாளர் ஆட்டோ சந்தனராஜ் தலைமை தாங்கினர். மாவட்ட வழக்கறிஞர் அணி செயலாளர் பிரவீன், மாவட்ட துணை செயலாளர் வினோத் முன்னிலையில் நடைபெற்ற விழாவில் விடுதியில் சிறுத்தை கட்சியின் தூத்துக்குடி மத்திய மாவட்ட செயலாளர் ஆட்டோ கணேசன், பாட்டாளி மக்கள் கட்சி மத்திய மாவட்ட செயலாளர் சின்னதுரை, திமுக ஆதிதிராவிடர் நலஅணி மாவட்ட தலைவர் சி.பெருமாள், மாநகர அமைப்பாளர் எம்.பரமசிவன், தமிழக வெற்றி கழகத்தின் தொகுதி பொறுப்பாளர் அஜிதா ஆக்னல், நந்தமிழர் தொழிலாளர் சங்கம செயலாளர் தாமோதரன், ஆதி திராவிடர் மகாஜன சங்கம் தலைவர் தர்மலிங்கம், லட்சிய திமுக மாவட்ட செயலாளர் சிம்பு கண்ணன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News