குடிநீரில் பெட்ரோல் கலந்த இருவர் கைது

களக்காட்டில் முன்விரோதம் காரணமாக பொது பயன்பாட்டுக்கான குடிநீர் டேங்க்கில் பெட்ரோல் கலந்த இருவரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2024-01-27 01:10 GMT

களக்காட்டில் முன்விரோதம் காரணமாக பொது பயன்பாட்டுக்கான குடிநீர் டேங்க்கில் பெட்ரோல் கலந்த இருவரை போலீசார் கைது செய்தனர். 

திருநெல்வேலி மாவட்டம் களக்காட்டை சேர்ந்த பன்னீர்செல்வம் மற்றும் சுதாகர் ஆகியோரின் வீட்டின் அருகே ஊராட்சி நிர்வாகம் சார்பில் சின்டெக்ஸ் குடிநீர் தொட்டி அமைக்கப்பட்டுள்ளது. இதில் தண்ணீர் நிரப்புவதில் இருவருக்கும் முன்விரோதம் இருந்த நிலையில் பன்னீர்செல்வம் வீட்டில் உள்ள தொட்டியில் பெட்ரோலை மர்ம நபர்கள் கலந்துள்ளனர்.இது குறித்து திருக்குறுங்குடி போலீசார் விசாரணை நடத்தி சுதாகர், தங்கராஜ் ஆகிய இருவரை நேற்று கைது செய்தனர்.
Tags:    

Similar News