அரசு அனுமதியில்லாமல் மது விற்ற இருவர் கைது !

குமாரபாளையத்தில் அரசு அனுமதியில்லாமல் மது விற்ற இருவர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2024-07-08 05:59 GMT

மது

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் பகுதியில் அரசு அனுமதி இல்லாமல் மது விற்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இன்ஸ்பெக்டர் ராமகிருஷ்ணன் உள்ளிட்ட போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். இதில் சின்னப்பநாயக்கன்பாளையம், ராஜராஜன் நகர் பகுதியில் மது விற்பதாக தகவலறிந்து நேரில் சென்று அங்கு மது விற்றுக்கொண்டிருந்த கணேசன், 40, செல்வம், 41, ஆகிய இருவரையும் கைது செய்தனர். இவர்களிடமிருந்து தலா 15 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
Tags:    

Similar News