கள்ளசாராயம் விற்பனை செய்த இருவர் கைது
அரூர் அருகே கள்ளச்சாரயம் விற்ற இருவரை மதுவிலக்கு காவல்துறையினர் கைது செய்தனர்.
Update: 2024-06-24 13:40 GMT
கள்ளச்சாராயம் விற்பனை
தர்மபுரி மாவட்டம், அரூர் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட கலசப்பாடி, அரச நத்தம், ஆலமரத்துவளவு ஆகிய பகுதிகளில் அரூர் மதுவிலக்கு காவல் ஆய்வாளர் வசந்தா. தலைமையிலான காவலர்கள் ரோந்து மேற்க்கொண்டனர். அப்போது கலசப்பாடியில் சந்தேகத்திற்கு இடமாக நின்று கொண்டிருந்த, இருவரை பிடித்து விசாரித்தனர்.
அதில் அவர்கள் லட்சுமி, சூர்யா என்பதும், ஊமத்தங்காய் சாறு கலந்த கள்ளச்சாராயம் விற்பனை செய்து வந்ததும் தெரியவந்தது.உடனே, இருவரையும் காவலர்கள் கைது செய்தனர். அவர்களிட மிருந்து 22 லிட்டர் கள்ளச்சாராயம் கைப்பற்றப்பட்டது.