திருப்பூர் வெள்ளியங்காடு பகுதியில் கஞ்சா விற்ற இருவர் கைது

திருப்பூர் வெள்ளியங்காடு பகுதியில் கஞ்சா விற்ற இருவரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2024-05-21 09:01 GMT

திருப்பூர் வெள்ளியங்காடு,முத்தையன் கோவில் அருகே கஞ்சா விற்பனை நடப்பதாக திருப்பூர் தெற்கு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதைத்தொடர்ந்து போலீசார் நேற்று அந்த பகுதியில் சென்று அதிரடி சோதனை மேற்கொண்டனர்.

இதில் அந்த பகுதியில் கஞ்சா விற்பனை செய்த 2 பேரை பிடித்தனர். அவர்களிடம் இருந்து 2 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர். விசாரணையில் அவர்கள் திருப்பூர் வீரபாண்டியை சேர்ந்த சூர்யா(வயது 24), பலவஞ்சிப்பாளையத்தை சேர்ந்த தமிழரசன்(27) என்பது தெரியவந்தது. 2 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

Tags:    

Similar News