திருப்பூர் வெள்ளியங்காடு பகுதியில் கஞ்சா விற்ற இருவர் கைது
திருப்பூர் வெள்ளியங்காடு பகுதியில் கஞ்சா விற்ற இருவரை போலீசார் கைது செய்தனர்.;
By : King 24X7 News (B)
Update: 2024-05-21 09:01 GMT
கைது செய்யப்பட்டவர்
திருப்பூர் வெள்ளியங்காடு,முத்தையன் கோவில் அருகே கஞ்சா விற்பனை நடப்பதாக திருப்பூர் தெற்கு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதைத்தொடர்ந்து போலீசார் நேற்று அந்த பகுதியில் சென்று அதிரடி சோதனை மேற்கொண்டனர்.
இதில் அந்த பகுதியில் கஞ்சா விற்பனை செய்த 2 பேரை பிடித்தனர். அவர்களிடம் இருந்து 2 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர். விசாரணையில் அவர்கள் திருப்பூர் வீரபாண்டியை சேர்ந்த சூர்யா(வயது 24), பலவஞ்சிப்பாளையத்தை சேர்ந்த தமிழரசன்(27) என்பது தெரியவந்தது. 2 பேரையும் போலீசார் கைது செய்தனர்.