புதுச்சேரியில் மது பாட்டில்கள் கடத்திய இருவர் குண்டாஸில் கைது

புதுச்சேரி மது பாட்டில்களை கடத்தி சென்ற இருவர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டனர்.

Update: 2024-04-10 14:17 GMT

புதுச்சேரி மது பாட்டில்களை கடத்தி சென்ற இருவர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டனர். விழுப்புரம் வானூர் தாலுகா, வாழப்பட்டாம் பாளையம், ராஜாராம் மகன் சூர்யா(28) மற்றும் பாண்டிச்சேரி, தட்டாஞ்சாவடி பகுதியை சேர்ந்த பரமசிவம் மகன் கதிரவன்(37) என்பவரும் கடந்த 29.02.2024 அன்று விக்கிரவாண்டி பெரிய காலனி அம்பேத்கர் சிலை அருகே விழுப்புரம் மது விலக்கு ஆய்வாளர் மீனா மற்றும் காவலர்கள் தலைமையில் வாகன தணிக்கை செய்தபோது சூர்யா மற்றும் கதிரவன் ஆகியோர் நான்கு சக்கர வாகனத்தில் புதுச்சேரி மதுபானங்கள் கடத்தி சென்றது தெரிய வந்தது.

இந்நிலையில் இவர்கள் இருவரும் தொடர்ந்து மதுக்கடத்தலில் ஈடுபட்டு வருவதால், எஸ்.பி., தீபக் சிவாச் பரிந்துரையின் பேரில், மாவட்ட ஆட்சியர் பழனி ஆணைக்கிணங்க, இருவரையும் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் கைது செய்து கடலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.

Tags:    

Similar News