மண் கடத்தலில் ஈடுபட்ட இருவர் கைது

குடியாத்தம் அருகே டிப்பர் லாரியில் முரம்பு மண் கடத்திய இருவரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2024-04-11 11:46 GMT

காவல் நிலையம் 

வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த உப்பரப்பள்ளி பகுதியில் குடியாத்தம் தாலுகா காவல் நிலைய போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அந்தப் பகுதி வழியாக டிப்பர் லாரியில் சோதனை மேற்கொண்டுள்ளனர். சோதனையில் அனுமதி இன்றி முரம்பு மண் கடத்தி வந்தது தெரிந்தது. பின்னர் மண் கடத்தி வந்த தட்டப்பாறை கிராமத்தைச் சேர்ந்த  சிவா மற்றும் கல்லூரி கிராமத்தைச் சேர்ந்த ஆனந்தபாபு ஆகியோரை கைது செய்து லாரியையும் பறிமுதல் செய்தனர்.
Tags:    

Similar News