யானை தாக்கியதில் இருவர் காயம்!

கோவை மாவட்டம் மருதமலை சுற்றுவட்டார பகுதியில் யானை தாக்கியதில் இருவர் காயமடைந்தனர்.

Update: 2024-06-17 13:34 GMT

கோவை மாவட்டம் மருதமலை சுற்றுவட்டார பகுதியில் யானை தாக்கியதில் இருவர் காயமடைந்தனர்.


கோவை மாவட்டம் மருதமலை மற்றும் தொண்டாமுத்தூர் வனப் பகுதிகளில் தற்போது ஏராளமான யானைகள் நடமாட்டம் உள்ளது. மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் கடந்த சில மாதங்களாக கடுமையான வறட்சி நிலவியதால் உணவு மற்றும் தண்ணீர் தேடி வந்த யானைகள் மலை அடிவாரம் பகுதியிலேயே முககாமிட்டுள்ளன.

இந்நிலையில் தொண்டாமுத்தூர் அருகே உள்ள வண்டிக்காரன் ஊர் பகுதியில் காட்டு யானை தாக்கியதில் ஜெயசூர்யா என்ற இளைஞர் காயம் அடைந்தார்.அவரை மீட்ட அப்பகுதி மக்கள் உடனடியாக தொண்டாமுத்தூர் அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளித்து மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதேபோல் மருதமலை லெப்ப்பர்சி காலனி பகுதியில் அதிகாலை துடியலூர் செல்வதற்காக மருதமலை பேருந்து நிலையத்திற்கு சென்று கொண்டிருந்த சிவசுப்பிரமணியம் (75) என்பவரை எதிர்பாராத விதமாக எதிரே வந்த ஒற்றை காட்டு யானை துதிக்கையால் தள்ளியதில் கீழே விழுந்து காயம் ஏற்பட்டதை அடுத்து சத்தம் கேட்டு வெளியே வந்த அருகில் இருந்த பொதுமக்கள் உதவியுடன் 108 ஆம்புலன்ஸில் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டு தற்பொழுது சிகிச்சை பெற்று வருகிறார்.

Tags:    

Similar News