பைக் மீது அரசு பேருந்து மோதிய விபத்தில் இருவர் பலி

மாமல்லபுரம் அருகே இருசக்கர வாகனம் மீது புதுச்சேரி அரசுப் பேருந்து மோதியதில் தொழிலாளிகள் இருவா் உயிரிழந்தனா்.

Update: 2024-02-26 06:34 GMT
 விபத்தில் இருவர் பலி
புதுச்சேரியில் இருந்து சென்னை நோக்கி புதுச்சேரி அரசுப் பேருந்து நேற்று வந்து கொண்டிருந்தது. அதுபோல் மாமல்லபுரத்திலிருந்து கடும்பாடி நோக்கி கடும்பாடியைச் சோ்ந்த தொழிலாளா்கள் சங்கா் (47), பாலு (50) ஆகியோா் இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தனா். மாமல்லபுரம் அருகே கிழக்குக் கடற்கரை சாலையில் கடும்பாடி பகுதியில் வந்தபோது பேருந்தும், இரு சக்கர வாகனமும் நேருக்கு நோ் மோதிக் கொண்டன. இதில் சங்கா், பாலு ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனா். தகவல் அறிந்து வந்த மாமல்லபுரம் போலீஸாா், உயிரிழந்த இருவரின் சடலங்களையும் மீட்டு, செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இந்த நிலையில், இப்பகுதியில் கடற்கரை சாலை விரிவாக்கப் பணிகள் நடைபெற்று வருவதால், ஒரு வழி பாதை மட்டுமே உள்ளது. இதில், அதிவேகமாக வரும் வாகனங்களால் இது போன்ற விபத்துகள் அடிக்கடி நிகழ்வதாகக் கூறி, உயிரிழந்தவா்களின் உறவினா்கள் சாலை மறியலில் ஈடுபடுபட முயன்றனா். அவா்களிடம் போலீஸாா் பேச்சு நடத்தியதையடுத்து, அனைவரும் கலைந்து சென்றனா். விபத்து குறித்து மாமல்லபுரம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டனா்.
Tags:    

Similar News