இரு கட்சி நிர்வாகிகள் விருகம்பாக்கத்தில் அடிதடி

விருகம்பாக்கத்தில் இரு கட்சி நிர்வாகிகள் அடிதடியில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2024-05-07 13:33 GMT

விருகம்பாக்கத்தில் இரு கட்சி நிர்வாகிகள் அடிதடியில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.


விருகம்பாக்கம் பெருமாள் கோவில் தெருவைச் சேர்ந்தவர் ஆதவன், 58; வி.சி.க., தென்சென்னை மாவட்ட முன்னாள் செயலர். அதே பகுதியைச் சேர்ந்தவர் நித்யசீலன், 40; புரட்சி பாரதம் கட்சி விருகம்பாக்கம் தொகுதி செயலராக உள்ளார். உறவினர்களான இவர்களுக்கு இடையே அடிக்கடி, குடும்ப பிரச்னை மற்றும் கட்சி ரீதியாகவும் தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. நேற்று முன்தினம், நித்யசீலன் தன் சகோதரர் பாரதி மற்றும் சாலமன், 19, ஆகியோருடன், கட்சியின் பேனரை புதுப்பித்துள்ளார். அங்கு 'பைக்'கில் வந்த ஆதவன், இவர்கள் மீது மோதுவது போல் சென்றுள்ளார். இதனால் ஏற்பட்ட தகராறில், இரு தரப்பினரும் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டனர். இதில் காயமடைந்த ஆதவன் தரப்பில் அவரது மனைவி மற்றும் உறவினர்கள் ஐந்து பேர், வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர். நித்யசீலன் அவரது தாய் மற்றும் உறவினர்கள் ஆறு பேர், ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர். இதுகுறித்து விருகம்பாக்கம் போலீசார் விசாரிக்கின்றனர்.
Tags:    

Similar News