பெண் உள்பட 2 பேர் குண்டர் சட்டத்தில் கைது

அரக்கோணம் பகுதியில் மதுவிலக்கு போலீசாரால் கைது செய்யப்பட்ட இருவர் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Update: 2024-07-04 17:36 GMT

கைதானவர் 

ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் மது விலக்கு அமலாக்கப் பிரிவு எல்லைக்குட்பட்ட பகுதியில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வந்த காஞ்சீபுரம் ஒலிமுகமதுபேட்டை பகுதியை சேர்ந்தவர்கள் மணிகண்டன் (37), சாந்தி (40) ஆகியோரை அரக்கோணம் மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு இன்ஸ்பெக்டர் அபர்ணா தலைமையிலான போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இவர்களின் குற்றச்செயல்களை கட்டுப்படுத்தும் வகையில் குண்டர் சட்டத்தில் கைது செய்ய மாவட்ட எஸ்பி கிரன் ஸ்ருதி, கலெக்டருக்கு பரிந்துரை செய்தார். அதன்பேரில் மணிகண்டன், சாந்தி ஆகிய 2 பேரை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய கலெக்டர் வளர்மதி உத்தரவிட்டார்.

Tags:    

Similar News