தாம்பரம் அருகே இரட்டை கொலை... அதிகாலையில் பயங்கரம்!!

தாம்பரம் அருகே கஞ்சா விற்பனை செய்வதில் போட்டி காரணமாக இருவர் கொலை செய்யப்பட்டிருக்கும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Update: 2024-07-04 04:12 GMT

கொலை

வண்டலூர் அடுத்த ஓட்டேரி காவல் நிலையத்தில், ஹரி என்ற ஆட்டோ ஓட்டுனர் காவல் நிலையத்தில் நேரடியாக வந்து பரபரப்பு புகார் ஒன்றை அளித்தார். நள்ளிரவில் இரண்டு இளைஞர்களை ஆட்டோவில் அழைத்துச் சென்றதாகவும், இரண்டு இளைஞர்களையும் மர்ம நபர்களால் கொலை செய்யப்பட்டதாகவும் காவல் நிலையத்தில் வாக்குமூலம் அளித்தார். போலீசார் நடத்திய விசாரணையில் தாம்பரம் அருகே பெருங்களத்தூர், குண்டுமேடு சுடுகாடு மற்றும் உரக்கிடங்கு அருகே, ஆட்டோ ஓட்டுனர் ஹரி அண்ணாமலை என்கிற ஜில்லா மற்றும் தமிழரசன் ஆகிய இருவரை அழைத்துச் சென்றுள்ளார். அங்கு ஒரு சில இளைஞர்கள் இருந்ததாக கூறப்படுகிறது, அங்கிருந்த இளைஞர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில், திடீரென அங்கிருந்து சிலர் தமிழரசன் மற்றும் அண்ணாமலை என்கிற ஜில்லா ஆகிய இருவரையும் வெட்டி கொலை செய்துள்ளது. இதனை அடுத்து ஆட்டோ ஓட்டுனர் ஹரி கொடுத்த தகவலின் அடிப்படையில், சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் உடலை மீட்டு செங்கல்பட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் போலீசார் நடத்திய விசாரணையில், கஞ்சா விற்பனையில் ஏற்பட்ட மோதலால் கொலை நடைபெற்றிருக்கலாம் என முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. 

Tambaram

Chengalpattu

Chengalpattu News

Chengalpattu Murder

Tambaram News

Tags:    

Similar News