குடவாசல் அருகே மாடு குறுக்கே வந்ததால் இருவர் படுகாயம்
குடவாசல் அருகே மாடு குறுக்கே வந்ததால் இருவர் படுகாயம் - போலீசார் வழக்கு பதிவு;
By : King 24x7 Angel
Update: 2024-02-14 07:38 GMT
குடவாசல் அருகே மாடு குறுக்கே வந்ததால் இருவர் படுகாயம்
திருவாரூர் மாவட்டம் குடவாசல் அருகே பூங்காவூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சரவணன் இவரும் இவரது நண்பர் அதே பகுதியைச் சேர்ந்த கிருஷ்ணா இருவரும் குடவாசல் கடை வீதியில் பொருட்கள் வாங்கிவிட்டு வீடு திரும்பினர். அப்போது எதிரே வந்த புதுக் குடியை சேர்ந்த விக்னேஸ்வரன் என்பவர் இருசக்கர வாகனத்தில் வந்த போது குறுக்கே மாடு வந்ததால் மாடு மீது மோதாமல் இருக்க வாகனத்தை திருப்பிய போது நிலை தடுமாறி எதிரே வந்த சரவணன் கிருஷ்ணா வந்த வாகனத்தின் மீது மோதியது. இதில் சரவணன் மற்றும் கிருஷ்ணா இருவருக்கும் காயம் ஏற்பட்டது. இதனை தொடர்ந்து சரவணன் குடவாசல் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பெயரில் விக்னேஸ்வரன் மீது வழக்கு பதிவு செய்து நடவடிக்கை.