திருவட்டாறு அருகே வீட்டில் நகை திருடிய இரண்டு பேர் கைது
திருவட்டாறு அருகே மகள் திருமணத்துக்காக சேர்த்த நகையை கொள்ளையடித்த இரண்டு பேர் கைது.;
By : King 24x7 Angel
Update: 2024-02-17 05:56 GMT
திருவட்டாறு அருகே வீட்டில் நகை திருடிய இரண்டு பேர் கைது
குமரி மாவட்டம் திருவட்டார் அருகே உள்ள காட்டாதுறை பகுதியை சேர்ந்தவர் ஆன்டனி. கேரளாவில் தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி செல்வி (45). இவர் வீட்டு வேலைகளுக்கு செல்வது வழக்கம். இவர்களின் மகள் திருமணத்திற்காக நகைகளை வாங்கி வீட்டில் உள்ள பீரோவில் வைத்திருந்தனர். இந்த நிலையில் சம்பவ தினம் செல்வி பீரோவை திறந்து பார்க்கும் போது, அதில் இருந்த மூன்று காப்புகள், ஆறு மோதிரங்கள், ஒரு ஜோடி கொலுசு உள்ளிட்ட நகைகளை காணவில்லை. இதன் மதிப்பு இதன் மதிப்பு ஒரு லட்சத்து 55 ஆயிரம் ரூபாய் ஆகும். மகள் திருமணத்துக்காக சேர்த்த நகையை காணாததால் செல்வி அதிர்ச்சி அடைந்தார். இதையடுத்து இவரின் பக்கத்து வீட்டில் வாடகைக்கு இருக்கும் காட்டாதுறையை சேர்ந்த ஸ்ரீதேவி மற்றும் இரவிபுதூர்கடை பகுதியை சேர்ந்த சமீர் ஆகியோர் இவர்கள் வீட்டில் அடிக்கடி வந்து செல்வது வழக்கம். சம்பவத்தன்று செல்வின் தாயார் வீட்டில் தனியாக இருக்கும்போது இவர்கள் இருவரும் வீட்டிற்கு வந்து சென்றுள்ளனர். இதனால் பீரோவில் இருந்த நகைகளை அவர்கள் திருடி சென்றதாக செல்வி திருவட்டார் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீஸ் விசாரணை நடத்தி ஸ்ரீதேவி மற்றும் சமீர் ஆகிய இருவரையும் கைது செய்தனர். மேலும் விசாரணை நடைபெற்று வருகிறது.