போலீசாரால் தேடப்பட்டு வந்த 2 பேர் கைது

குற்ற வழக்கில் தேடப்பட்டு வந்த இருவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Update: 2024-06-26 16:20 GMT

கைது 

வேலூர் சாய்நாதபுரம் வடிவேல்நகரை சேர்ந்தவர் ஜெகன் (35). இவர் மீது நகை பறிப்பு வழக்குகள் உள்ளன. இவரை சத்துவாச்சாரி போலீசார் தேடி வந்தனர். இந்த நிலையில் அவர் தலைமறைவாகிவிட்டார். அவரை பிடிக்க கோர்ட்டு உத்தரவு பிறப்பித்தது. தொடர்ந்து அவரை போலீசார் தேடி வந்தனர்.

இதே போல சத்துவாச்சாரி அலமேலுமங்காபுரத்தை சேர்ந்த மணிகண்டன் (32) என்பவரை மணல் கடத்தல் வழக்கில் போலீசார் தேடி வந்தனர்.இந்த நிலையில் தலைமறைவாக இருந்த இருவரையும் சத்துவாச்சாரி இன்ஸ்பெக்டர் ராஜா தலைமையிலான போலீசார் கைது செய்தனர்.

Tags:    

Similar News