நேருக்கு நேர் மோதல் - விபத்து

கரூர் அருகே 2 பைக்குகள் நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டது.;

Update: 2024-05-17 11:18 GMT

கோப்பு படம்

 கரூர் மாவட்டம், மன்மங்கலம் தாலுகா, பள்ளபாளையம், அரசு காலணி பகுதியைச் சேர்ந்தவர் ரகுபதி மனைவி ராதிகா வயது 40. இவர் மே 13ஆம் தேதி இரவு 8 :20 மணி அளவில், கரூரிலிருந்து சின்னதாராபுரம் செல்லும் சாலையில் அவரது டூ வீலரில் சென்று கொண்டிருந்தார். இவரது வாகனம் குளத்தூர்பட்டி, ஹெச்பி பெட்ரோல் பங்க் அருகே சென்றபோது, எதிர் திசையில் கரூர் மாவட்டம், மண்மங்கலம் அருகே உள்ள வாங்கல், ஈஸ்வரன் கோவில் தெருவை சேர்ந்த பழனியாண்டி மகன் சுதாகரன் வயது 25 என்பவர் வேகமாக ஓட்டி 

Advertisement

வந்து ராதிகா ஓட்டிச் சென்ற டூவீலர் மீது நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் ராதிகாவுக்கு வலது கண்ணில் பலத்த காயங்கள் ஏற்பட்டதால், உடனடியாக அவரை மீட்டு, தனியார் ஆம்புலன்ஸ் மூலம் கரூரில் உள்ள அட்சயா மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இந்த சம்பவம் தொடர்பாக ராதிகா அளித்த புகாரின் பேரில், சம்பவ இடத்திற்கு சென்று விசாரண மேற்கொண்ட காவல்துறையினர், டூவீலரை வேகமாகவும், அஜாக்கிரதையாகவும் ஓட்டி, விபத்து ஏற்படுத்திய சுதாகரன் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர் க. பரமத்தி காவல்துறையினர்.

Tags:    

Similar News