சைக்கிள் டூவீலர் நேருக்கு நேர் மோதி விபத்து !

சைக்கிள் டூவீலர் நேருக்கு நேர் மோதி விபத்து. முதியவர் படுகாயம். காவல்துறை வழக்கு பதிவு.

Update: 2024-03-06 12:31 GMT
காவல்துறை
 கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி தாலுகா, பள்ளப்பட்டி, தைக்கால் தெரு பகுதியைச் சேர்ந்தவர் சவுக்கத் அலி வயது 70. இவர் மார்ச் 5ஆம் தேதி மதியம் ஒரு மணி அளவில், பள்ளப்பட்டியில் இருந்து அரவக்குறிச்சி செல்லும் சாலையில் அவரது சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். இவரது சைக்கிள் பள்ளப்பட்டி ஈத்கா மைதானம் அருகே சென்ற போது, எதிர் திசையில், அடையாளம் தெரியாத டூவீலர் ஒன்று வேகமாக சென்று சவுக்கத் அலி ஓட்டிச் சென்ற சைக்கிள் மீது மோதிவிட்டு, நிற்காமல், மின்னல் வேகத்தில் சென்று விட்டது. இந்த சம்பவத்தில் சைக்கிள் உடன் கீழே விழுந்த சவுக்கத் அலிக்கு பின்னந்தலை, வலது கால் முட்டி உள்ளிட்ட பகுதிகளில் பலத்த காயம் ஏற்பட்டது. சைக்கிளும் சேதமடைந்தது. உடனடியாக சவுக்கத் அலியை மீட்டு, தனியார் ஆம்புலன்ஸ் மூலம், கரூரில் உள்ள நாதன் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இந்த சம்பவம் அறிந்த சவுக்கத் அலியின் மகன் சேக் பரித் வயது 45 என்பவர், இது குறித்து காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில், சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர், இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து, விபத்து ஏற்படும் வகையில் மோதிவிட்டு நிற்காமல் சென்ற டூவீலர் எது? அதை ஓட்டிய நபர் யார்? என்ற கோணத்தில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் அரவக்குறிச்சி காவல்துறையினர்.
Tags:    

Similar News