ரயில்வே கேட்ட அருகே டூ வீலர்- கார் நேருக்கு நேர் மோதி விபத்து

ரயில்வே கேட்ட அருகே டூ வீலர்- கார் நேருக்கு நேர் மோதி விபத்து. ஒருவர் படுகாயம்.

Update: 2024-07-05 09:28 GMT
நாமக்கல் மாவட்டம், போத்தனூர், கிழக்கு தெருவை சேர்ந்தவர் சங்கர் வயது 37. இவர் ஜூன் 30-ஆம் தேதி மதியம் 3 மணியளவில், கரூர் மாவட்டம், புன்னம் சத்திரத்தில் இருந்து வேலாயுதம்பாளையம் செல்லும் சாலையில் அவரது டூவீலரில் சென்று கொண்டு இருந்தார். இவரது வாகனம் அப்பகுதியில் உள்ள ரயில்வே கேட் அருகே சென்ற போது, எதிர் திசையில், கரூர் மாவட்டம், வேலாயுதம்பாளையம் செல்லப்ப கவுண்டன் தெருவை சேர்ந்த நல்லசிவம் வயது 52 என்பவர் வேகமாக ஓட்டி வந்த கார், சங்கர் ஓட்டிச் சென்ற டூவீலர் மீது நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் பலத்த காயமடைந்த சங்கரை மீட்டு தனியார் ஆம்புலன்ஸ் மூலம் கரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இந்த சம்பவம் அறிந்த சங்கரின் மனைவி பேச்சி வயது 23 என்பவர், இது குறித்து காவல்துறையினருக்கு அளித்த புகாரின்பேரில், சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர், காரை வேகமாகவும், அஜாக்கிரதையாகவும் ஓட்டி விபத்து ஏற்படுத்திய நல்லசிவம் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர் வேலாயுதம்பாளையம் காவல்துறையினர்.
Tags:    

Similar News