முதியவர் ஓட்டிய டூவீலர் மீது கார் மோதி விபத்து !

முதியவர் ஓட்டிய டூவீலர் மீது, வாலிபர் ஓட்டிய கார் மோதி விபத்து.முதியவர் படுகாயம் அடைந்தார்.

Update: 2024-03-13 06:21 GMT

 தாந்தோணிமலை காவல்துறை

முதியவர் ஓட்டிய டூவீலர் மீது, வாலிபர் ஓட்டிய கார் மோதி விபத்து.முதியவர் படுகாயம். கரூர் மாவட்டம், மன்மங்கலம் தாலுக்கா, செட்டிபாளையம், காசா காலனி பகுதியைச் சேர்ந்தவர் சென்னியப்பன் வயது 67. இவர் மார்ச் 10 ஆம் தேதி காலை 7: 35- மணி அளவில், கரூர்- திண்டுக்கல் சாலையில் அவரது டூவீலரில் சென்று கொண்டு இருந்தார். இவரது டூவீலர் சுக்காலியூர் செக்போஸ்ட் அருகே சென்றபோது அதே சாலையில், நாமக்கல் மாவட்டம், ராசிபுரம், மல்லூர் அருகே உள்ள பொன்பரப்பி பட்டி பகுதியைச் சேர்ந்த விஜயராஜன் வயது 31 என்பவர், வேகமாக ஓட்டி வந்த ஆம்னி வேன், சென்னியப்பன் ஓட்டிச் சென்ற டூவீலர் மீது மோதி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் பலத்த காயமடைந்த சென்னியப்பனை மீட்டு, தனியார் ஆம்புலன்ஸ் மூலம் கரூரில் உள்ள நாச்சிமுத்து மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இந்த சம்பவம் அறிந்த சென்னியப்பனின் மகன் செல்வராஜ் வயது 44 என்பவர், அளித்த புகாரின் பேரில் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர், ஆம்னி வேனை வேகமாகவும் கவனக்குறைவாகவும் ஓட்டி, விபத்து ஏற்படுத்திய விஜயராஜன் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர் தாந்தோணிமலை காவல்துறையினர்.
Tags:    

Similar News