டூவீலர் மீது சரக்கு வாகனம் நேருக்கு நேர் மோதி விபத்து - 3 இளைஞர்கள் படுகாயம்

டூவீலர் மீது சரக்கு வாகனம் நேருக்கு நேர் மோதி விபத்து நடந்ததையடுத்து 3 இளைஞர்கள் படுகாயமடைந்துள்ளனர்.

Update: 2024-02-17 10:17 GMT
கரூர் மாவட்டம், கோடங்கிபட்டி பகுதியைச் சேர்ந்தவர் ஜெயராஜ் மகன் அருண் ஜஸ்டின் வயது 19, இவரது நண்பர்கள் திருச்சி மாவட்டம், மணப்பாறை பகுதியைச் சேர்ந்தவர் சவேரியர் மகன்கள் ஜான்சன் மற்றும் செபாஸ்டின் சுபாஷ். 3-பேரும் பிப்ரவரி 15ஆம் தேதி மாலை 5:30 மணி அளவில், கரூர் மாவட்டம், சிந்தாமணிப்பட்டி காவல் எல்லைக்குட்பட்ட, காணியாளம்பட்டியில் இருந்து தரகம்பட்டி செல்லும் சாலையில் டூ வீலரில் சென்று கொண்டு இருந்தனர். டூவீலரை அருண் ஜஸ்டின் ஓட்டிச் சென்றார். இவர்களது வாகனம், வரவணை,அங்காள பரமேஸ்வரி கோவில் அருகே வந்த போது, எதிர் திசையில் கரூர் மாவட்டம், ஜெகதாபி அருகே உள்ள துளசி கொடும்பு பகுதியைச் சேர்ந்த சரவணன் வயது 23 என்பவர், வேகமாக ஓட்டி வந்த டாடா ஈச்சர் சரக்கு வாகனம், அருண் ஜஸ்டின் ஓட்டிச் சென்ற டூவீலர் மீது நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் டூவீலருடன் கீழே விழுந்த மூன்று பேருக்கும் பலத்த காயம் ஏற்பட்டது. இதில் அருண் ஜஸ்டின் மற்றும் செபாஸ்டியன் சுபாஷ் ஆகிய இருவரையும் தனியார் ஆம்புலன்ஸ் மூலம் அருகில் உள்ள மயிலம்பட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இதேபோல, ஜான்சனை தனியார் ஆம்புலன்ஸ் மூலம் கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இந்த சம்பவம் தொடர்பாக, அருண் ஜஸ்டின் அளித்த புகாரின் பேரில், சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர், சரக்கு வாகனத்தை வேகமாகவும் அஜாக்கிரதையாகவும் ஓட்டி விபத்து ஏற்படுத்திய சரவணன் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர் சிந்தாமணிப்பட்டி காவல் துறையினர்.
Tags:    

Similar News