திருக்காம்புலியூர் பஸ் ஸ்டாப் அருகே டூ வீலர்- லாரி விபத்து

திருக்காம்புலியூர் பஸ் ஸ்டாப் அருகே டூ வீலர்- லாரி நேருக்கு நேர் மோதிய விபத்தில் ஒருவர் படுகாயம் அடைந்தார்.

Update: 2024-06-06 12:35 GMT

திருக்காம்புலியூர் பஸ் ஸ்டாப் அருகே டூ வீலர்- லாரி நேருக்கு நேர் மோதல். ஒருவர் படுகாயம். கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் தாலுக்கா, மேட்டு திருக்காம்புலியூர், பகவதி அம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் சக்திவேல் வயது 46. இவர் ஜூன் 3-ம் தேதி இரவு 9 மணி அளவில், அவரது டூவீலரில் திருச்சி - கரூர் சாலையில் சென்று கொண்டிருந்தார். இவரது வாகனம் திருக்காம்புலியூர் பஸ் ஸ்டாப் அருகே சென்றபோது, எதிர் திசையில், திருவாரூர் மாவட்டம், நீடாமங்கலம் அருகில் உள்ள வடபதி மங்கலம் பகுதியைச் சேர்ந்த சஞ்சய் என்பவர் வேகமாக ஓட்டி வந்த லாரி, சக்திவேல் ஓட்டிச் சென்ற டூவீலர் மீது நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டது.

இந்த விபத்தில் வாகனத்துடன் கீழே விழுந்ததில் சக்திவேலுக்கு பலத்த காயங்கள் ஏற்பட்டது. உடனடியாக அவரை மீட்டு தனியார் ஆம்புலன்ஸ் மூலம் கரூரில் உள்ள நாச்சிமுத்து மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இந்த சம்பவம் தொடர்பாக சக்திவேல் அளித்த புகாரின் பேரில், சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர், இது தொடர்பாக லாரியை வேகமாகவும், அஜாக்கிரதையாகவும் ஓட்டி, விபத்து ஏற்படுத்திய சஞ்சய் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர் மாயனூர் காவல்துறையினர்.

Tags:    

Similar News