சேலம் 5ரோடு அருகே கத்திமுனையில் டூவீலர் பறிப்பு

சேலம் 5ரோடு அருகே கத்திமுனையில் டூவீலர் பறிக்கபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Update: 2024-05-06 16:16 GMT

கோப்பு படம் 

சேலம் இரும்பாலை எம்.கொல்லப்பட்டியை சேர்ந்தவர் ரஞ்சித்(28).இவர் நேற்று இரவு 9 மணியளவில் ஏவிஆர் ரவுண்டானா அருகில் உள்ள ரெடிமேடு கடையில் துணி வாங்கி விட்டு வெளியே வந்தார். க

டையின் முன்பு நிறுத்தியிருந்த டூவீலரை எடுத்தபோது, திடீரென அங்கு வந்த 2 பேர், கத்தியை காட்டி மிரட்டினர். அவர் ஸ்டார்ட் செய்த டூவீலரை எடுத்துக்கொண்டு மின்னல் வேகத்தில் சென்று விட்டனர்.

இதனால், அதிர்ச்சியடைந்த ரஞ்சித், சூரமங்கலம் போலீசில் புகார் செய்தார். சம்பவ இடம் விரைந்து வந்த போலீசார், சம்பவ இடத்தில் உள்ள சிசிடிவி கேமராவை ஆய்வு செய்து, டூவீலரை பறித்துக்கொண்டு தப்பிய நபர்களை தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

Similar News