அறந்தாங்கியில் இருசக்கர வாகனங்கள் திருட்டு: 4 பேர் கைது

அறந்தாங்கியில் இருசக்கர வாகனங்கள் திருட்டு வழக்கில் 4 பேர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2024-05-10 11:27 GMT

காவல் நிலையம் 

அறந்தாங்கி பகுதியில் கடந்த சில நாட்களாக அடிக்கடி இருசக்கர வாகனங்கள் திருட்டுப் போவதாக போலீசாருக்கு புகார்கள் வந்தன. அதன்பேரில் இன்ஸ்பெக்டர் கருணாகரன் தலைமையிலான போலீசார் அறந்தாங்கி, ஆவுடையார்கோவில், மண மேல்குடி தாலுகா பகுதிகளில் விசாரணை நடத்தி வந்தனர்.

இந்நிலையில் சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் சண்முகம் தலைமையிலான போலீசார் அறந்தாங்கி கட்டுமாவடி சாலையில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது,அங்கு சந்தேகப்படும் வகையில் நின்றுக்கொண்டிருந்த சின்ன அண்ணா நகரை சேர்ந்த மோகன்(20), ரயில்வே பீடர் ரோடு பிரகாஷ் (23), களப்பகாடு செல்வகுமார்(19), அறந்தாங்கி மகேந்திரன் (24) ஆகியோரிடம் விசாரித்தபோது, இருசக்கர வாகன திருட்டில் ஈடுபட்டு வந்தவர்கள் என்பது தெரியவந்தது.

இதையடுத்து 4 பேரையும் கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்து 4 இருசக்கர வாகனங்களை பறிமுதல் செய்தனர்.

Tags:    

Similar News