டூ வீலர்கள் மோதல் - தாய், குழந்தை படுகாயம்.

வேலாயுதம்பாளையம் அருகே இருசக்கர வாகனங்கள் மோதிக்கொண்ட விபத்தில் தாயும்,குழந்தையும் காயமடைந்தனர்.;

Update: 2024-06-25 08:38 GMT

காவல் நிலையம் 

கரூர் மாவட்டம், புகலூர் தாலுகா, குப்பம் வடக்கு தெருவை சேர்ந்தவர் ஆனந்தராஜ் மனைவி சசிகலா வயது 29. இவரது மகன் ஆதித்யா வயது 3. ஜூன் 20ஆம் தேதி காலை 9 மணி அளவில், குப்பத்தில் இருந்து குந்தாணி பாளையம் சாலையில் அவரது மகன் ஆதித்யாவுடன் டூவீலரில் சென்றார் சசிகலா. இவரது வாகனம் குந்தாணி பாளையம் பகுதியில் உள்ள இறைச்சி கடை அருகே சென்றபோது, எதிர் திசையில் அருகில் உள்ள குந்தாணிபாளையம் கிழக்கு தெருவை சேர்ந்த மகேந்திரன் என்பவர் ஓட்டி வந்த டூ வீலர், சசிகலா ஓட்டி சென்ற டூவீலர் மீது நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டது.

Advertisement

இந்த விபத்தில் வாகனத்துடன் கீழே விழுந்ததில் சசிகலா மற்றும் குழந்தை ஆதித்யா ஆகிய இருவருக்கும் பலத்த காயங்கள் ஏற்பட்டதால், உடனடியாக அவர்களை மீட்டு, தனியார் ஆம்புலன்ஸ் மூலம், கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். சம்பவம் தொடர்பாக சசிகலா அளித்த புகாரின் பேரில், சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர், டூவீலரை வேகமாகவும், அஜாக்கிரதையாகவும் ஓட்டி, விபத்து ஏற்படுத்திய மகேந்திரன் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர் வேலாயுதம்பாளையம் காவல்துறையினர்.

Tags:    

Similar News