ஆடு திருடிய இரண்டு இளைஞர்கள் கைது !

ஆத்தூர் அருகே உமையாள்புரம் கிராமத்தில் ஆடு திருடிய இரண்டு நபர்களை பிடித்த பொதுமக்கள் தர்மா அடி கொடுத்து காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

Update: 2024-04-26 09:25 GMT
சேலம் மாவட்டம் பெத்தநாயக்கன்பாளையம் அருகே உமையாள்புரம் கிராமத்தில் மேட்டுக் கொட்டாய் பகுதியைச் சேர்ந்த ஆதிமூலம் மகன் மாணிக்கம் பட்டியில் கட்டியிருந்த 30 கிலோ எடை கொண்ட ஆட்டை இரண்டு பேர் திருடிக்கொண்டிருந்த போது ஆட்டின் உரிமையாளர் மாணிக்கம் மற்றும் அவரது குடும்பத்தினரும் சத்தம் கேட்பதை அறிந்து வெளியே சென்று பார்க்கும் போது ஆட்டு பட்டியில் ஆட்டை திருடுவதை அறிந்து அவர்கள் கூச்சலிட்டனர். அப்போது அருகே உள்ளவர்கள் ஓடி வந்து ஆட்டை திருடிய இரண்டு பேரையும் பிடித்து அங்கு உள்ள பச்சையம்மன் கோவில் பகுதியில் அழைத்துச் சென்று தரும அடி கொடுத்தனர். தகவல் அறிந்து வந்த ஏத்தாப்பூர் போலீசார் ஆடு திருடிய இரண்டு பேரையும் ஊர் பொதுமக்களிடமிருந்து மீட்டு விசாரணை மேற்கொண்டதில் 1)கொட்டவாடி பகுதியைச் சேர்ந்த ராயர் மகன் கார்த்திக் (27). 2) குமாரபாளையம் தொகுதியைச் சேர்ந்த சன்னாசி மகன் வேலு மணிகண்டன் (30)என்பதும் தெரியவந்தது இதனையடுத்து போலீசார் அவர்களை பெத்தநாயக்கன்பாளையம் அரசு மருத்துவமனையில் முதல் உதவி செய்யப்பட்டு வழக்கு பதிவு செய்து இருவரையும் கைது செய்தனர்.
Tags:    

Similar News