தேனியில் குற்றவாளிக்கு கஞ்சா வழங்கிய இரண்டு இளைஞர்கள் கைது

தேனியில் குற்றவாளிக்கு கஞ்சா வழங்கிய இரண்டு இளைஞர்கள் கைது செய்யப்பட்டனர்.

Update: 2024-03-08 12:46 GMT

கஞ்சா சப்ளை செய்தவர்

தேனி மாவட்டம் சின்னமனூர் பகுதியைச் சேர்ந்தவர் ஒல்லிக்குச்சி என்ற ஒண்டி என்பவர் கடந்த 2023 ஆம் ஆண்டு சின்னமனூர் பகுதியில் நடைபெற்ற கொலை சம்பந்தமாக கொலை குற்றம் சுமத்தப்பட்டு மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில் தேனி மாவட்ட ஏ.ஆர்.காவலர்கள் நான்கு பேர் மதுரை மத்திய சிறையில் இருந்து வழக்கு விசாரணைக்காக கொலை குற்றம் சாட்டப்பட்ட ஒல்லிக்குச்சி என்ற ஒண்டியை தேனி மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் உள்ள கூடுதல் அமர்வு நீதிமன்றத்திற்கு அழைத்து வந்து ஆஜர் படுத்த நீதிமன்ற வளாகத்தில் உள்ள காத்திருப்பு அறையில் இருந்தனர்.

அப்பொழுது கொலை குற்றம் சாட்டப்பட்ட ஒண்டியின் உறவினரான தனுஷ்கோடி என்ற இளைஞர் மறைத்து வைத்திருந்த கஞ்சா பொட்டலத்தை கொலை குற்றம் சாட்டப்பட்ட ஒண்டியிடம் கொடுத்த பொழுது பாதுகாப்பிற்கு வந்திருந்த ஏ.ஆர்.காவலர்கள் கையும் களவுமாக பிடித்தனர்.

இதனைத் தொடர்ந்து அவருடன் வந்திருந்த மற்றொரு இளைஞரிடம் சோதனை செய்த பொழுது அவரிடமும் கஞ்சா பொட்டலம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதில் இருவரிடமிருந்தும் 200 கிராம் கஞ்சா பொட்டலங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது

. இதனைத் தொடர்ந்து நீதிமன்றத்திற்குள் கொலை குற்றம் சாட்டப்பட்ட நபருக்கு கஞ்சா வழங்க முற்பட்ட பொழுது பிடிபட்ட இருவரையும் பெரியகுளம் தென்கரை காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டு வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

Tags:    

Similar News