உடுமலைப்பேட்டை : ஆட்சியர் தலைமையில் ஆய்வு கூட்டம்
உடுமலைப்பேட்டை நகரமன்ற அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் கிறிஸ்துராஜ் தலைமையில் மாவட்ட அளவில் அனைத்துதுறை அரசு அலுவலர்களுடன் ஆய்வு கூட்டம் நடைபெற்றது.;
Update: 2024-02-01 05:47 GMT
ஆய்வு கூட்டம்
திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை நகராட்சி அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் கிறிஸ்துராஜ் தலைமையில் மாவட்ட அளவில் அனைத்துறை அலுவலர்களுடன்டன் ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.இக்கூட்டத்தில் மாவட்ட காவல்கண்காணிப்பாளர்அபிஷேக்குப்தா, மாவட்ட வன அலுவலர் தேவேந்திர குமார் மீனா, மாவட்ட வருவாய் அலுவலர் ஜெய் பீம், ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் மலர்விழி, உடுமலை வருவாய் கோட்டாட்சியர் ஜஸ்வந்த் கண்ணன், உடுமலை நகர் மன்ற தலைவர் மத்தின் மற்றும் அனைத்து அரசு அலுவலர்களும் கலந்து கொண்டனர்