புளியங்குடியில் கிணற்றில் மிதந்த அடையாளம் தெரியாத பெண் சடலம் மீட்பு

புளியங்குடியில் கிணற்றில் மிதந்த அடையாளம் தெரியாத பெண் சடலம் மீட்கப்பட்டுள்ளது

Update: 2024-02-27 14:13 GMT
புளியங்குடியில் கிணற்றில் மிதந்த அடையாளம் தெரியாத பெண் சடலம் மீட்பு

தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூர் அருகே புளியங்குடி அருகே சிந்தாமணி இல்லத்துப்பிள்ளைமார் சமுதாயத்திற்கு பாத்தியப்பட்ட கிணற்றில் 50 வயது மதிக்கத்தக்க அடையாளம் தெரியாத பெண்ணின் சடலம் கிணற்றில் மிதந்தது.

இதைக் கண்ட அப்பகுதி பொதுமக்கள் வாசுதேவநல்லூர் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். விரைந்து சென்ற தீயணைப்புத் துறையினர் கிணற்றில் கிடந்த பெண் சடலத்தை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

இது குறித்து புளியங்குடி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags:    

Similar News