சீரற்ற மின் விநியோகம் - பொதுமக்கள் சாலை மறியல்

சீரான மின் விநியோகம் வழங்க கோரி வந்தவாசி-மேல்மருவத்தூர் சாலையில் அமர்ந்து பொதுமக்கள் சாலை மறியல் பேராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2024-05-15 06:36 GMT

சாலை மறியல் 

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அடுத்த பிருதூர் கிராமத்தில் 500-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வரும் நிலையில் கடந்த சில நாட்களாக மின்சாரம் சீராக வழங்கப்படவில்லை. இதுகுறித்து பலமுறை புகார் தெரிவித்தும் உரிய நடவடிக்கை எடுக்காததால் அப்பகுதி மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவலறிந்த வந்தவாசி வடக்கு காவல் நிலைய போலீசார் மின் துறையிடம் பேசி உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர்.இதனைத் தொடர்ந்து பொதுமக்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.
Tags:    

Similar News