அழகாபுரி பஸ் ஸ்டாண்டில் அடையாளம் தெரியாத பெண் சடலம் மீட்பு

அழகாபுரி பஸ் ஸ்டாண்டில் அடையாளம் தெரியாத பெண் சடலம் மீட்பு; நத்தம் பட்டி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

Update: 2024-04-25 04:14 GMT
 அழகாபுரி பஸ் ஸ்டாண்டில் அடையாளம் தெரியாத பெண் சடலம் மீட்பு; நத்தம் பட்டி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.
விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு தாலுகா வடுகபட்டி கிராம நிர்வாக அலுவலராக பணிபுரிபவர் சக்திவேல் இவர் அலுவலகத்தில் இருந்த பொழுது அழகாபுரி பேருந்து நிறுத்தத்தில் அடையாளம் தெரியாத 45 வயது மதிக்கத்தக்க பெண் இறந்த நிலையில் சடலமாக கிடப்பதாக தகவல் கிடைத்தது அங்கு சென்று பார்த்த நபர் இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்க கோரி நத்தம் பட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்தார் இந்த புகாரின் அடிப்படையில் ரத்தம் பட்டி காவல்துறையினர் வழக்கு பதிவு செய்த விசாரணை நடத்தி வருகின்றனர்
Tags:    

Similar News