நெல்லையில் நிவாரண நிதி வழங்கிய ஒன்றிய செயலாளர்

நெல்லையில் நிவாரண நிதி ஒன்றிய செயலாளர் வழங்கினார்.

Update: 2023-12-31 11:22 GMT

நிவாரண நிதி வழங்கிய ஒன்றிய செயலாளர்

நெல்லையில் பெய்த கனமழை காரணமாக பாதிக்கப்பட்ட குடும்ப அட்டைதாரர்களுக்கு தமிழக அரசால் 6000 ரூபாய் வழங்கப்பட்டு வருகின்றது. அந்த வகையில் இன்று காலை அணைத்தலையூர் நியாய விலை கடையில் மாவட்ட திமுக துணை செயலாளர் மணி தலைமையில் கிழக்கு ஒன்றிய திமுக செயலாளர் அருள்மணி நிவாரண நிதி வழங்கினார்.

இந்த நிகழ்வில் ஒன்றிய கவுன்சிலர் மாலதி செல்லத்துரை உள்ளிட்ட திமுகவினர் கலந்து கொண்டனர். இதில் அப்பகுதியில் பாதிக்கப்பட்ட மக்கள் கலந்து கொண்டு நிவாரண நிதியை பெற்றனர்.

Tags:    

Similar News