நெய்வேலியில் தொழிற்சங்க மண்டல கலந்தாய்வு கூட்டம்
கடலூர் மாவட்டம்,நெய்வேலி பாட்டாளி போக்குவரத்து தொழிற்சங்க மண்டல கலந்தாய்வு கூட்டத்தில் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.;
Update: 2024-02-28 04:21 GMT
ஆலோசனை கூட்டம்
கடலூர் மாவட்டம், நெய்வேலி என். எல். சி. பாட்டாளி தொழிற்சங்க அலுவலகத்தில் நடைபெற்ற பாட்டாளி போக்குவரத்து தொழிற்சங்கம் கடலூர் மண்டல கலந்தாய்வு கூட்டத்தில் பாட்டாளி தொழிற்சங்க பேரவை மாநில பொதுச்செயலாளர் இராம. முத்துக்குமார், தலைவர் வீரமணி, உள்ளிட்ட நிர்வாகிகளுடன் பாட்டாளி மக்கள் கட்சியின் கடலூர் வடக்கு மாவட்ட செயலாளர் ஜெகன் கலந்து கொண்டு கருத்துரை வழங்கினார். உடன் பாட்டாளி மக்கள் கட்சியின் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.