இளையான்குடி ஊராட்சி ஒன்றிய கவுன்சில் கூட்டத்தில் சலசலப்பு

Update: 2023-11-21 01:49 GMT

ஒன்றியக்குழு கூட்டம் 

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

சிவகங்கை மாவட்டம், இளையான்குடியில் ஊராட்சி ஒன்றிய கவுன்சில் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் முனியாண்டி தலைமை வகித்தார். இந்த ஊராட்சி ஒன்றிய கூட்டத்தில் கலந்துகொண்ட ஒன்றிய கவுன்சிலர்கள் தங்கள் பகுதியில் உள்ள குறைகளை எடுத்துரைத்தனர். 3வார்டு ஒன்றிய குழு உறுப்பினர் முருகானந்தம் பேசுகையில், இளையான்குடி, மானாமதுரை, சாலைக்கிராமம், 3க்கும் ஒரே மின் நிலையம்தான் உள்ளது. ஆனால் மின்சாரத்துறையும், நெடுஞ்சாலைத்துறையும் நாங்கள் கூறுகின்ற குறைகளை கேட்க அதிகாரிகள் வருவதில்லை, மெத்தனமா இருக்கிறார்கள். நாங்கள் எதற்கு இந்த கூட்டத்திற்கு வரவேண்டும். நீங்கள் கொடுக்கும் டீயையும், பிஸ்கட்டையும் சாப்பிட்டு விட்டு போவதற்கா வருகிறோம், அடுத்த கூட்டத்திற்கு அதிகாரிகள் வரவில்லை என்றால் நாங்கள் சாலை மறியல் பண்ணுவோம்,அவங்க மேல நீங்க நடவடிக்கை எடுக்க பரிந்துரைக்க வேண்டும் என பேசினார். இதனால் சலசலப்பு ஏற்பட்டது

Tags:    

Similar News