வேலூர் புதிய பேருந்து நிலையம் வரை பயணிகளின் வசதிக்காக கூடுதல் பேருந்துகள் இயக்கம்

வேலூர் புதிய பேருந்து நிலையம் வரை பயணிகளின் வசதிக்காக கூடுதல் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

Update: 2023-12-04 12:38 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

புயல் மழையின் காரணமாக சென்னையில் பல்வேறு இடங்களில் தண்ணீர் தேங்கி இருப்பதால், ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக காட்பாடி வழியாக சென்னை செல்லக்கூடிய ரயில்கள், காட்பாடியிலேயே நிறுத்தப்படுகிறது . சென்னை செல்லக்கூடிய பயணிகள் பேருந்துகள் மூலம் சென்னை செல்வதற்கு, காட்பாடி ரயில் நிலையத்திலிருந்து , வேலூர் புதிய பேருந்து நிலையம் வரை பத்துக்கும் மேற்பட்ட சிறப்பு பேருந்துகள் இயக்க , மாவட்ட நிர்வாகத்தால் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக காட்பாடி ரயில் நிலையத்திலிருந்து வேலூர் பேருந்து நிலையத்தில் வருகை தந்து, அங்கிருந்து பயணிகள் பேருந்துகள் மூலம் சென்னைக்கு செல்கின்றனர்.

Tags:    

Similar News