திருப்பூரில் வைகாசி விசாக தேர் திருவிழா ஆலோசனைக் கூட்டம்

திருப்பூரில் வைகாசி விசாக தேர் திருவிழா ஆலோசனைக் கூட்டம் மாநகராட்சி மேயர் தினேஷ்குமார் தலைமையில் நடைபெற்றது.

Update: 2024-05-09 16:30 GMT

ஆலோசனை கூட்டம் 

திருப்பூர் விஸ்வேஸ்வர சுவாமி மற்றும் வீரராகவ பெருமாள் கோவில்களின் வைகாசி விசாக தேர் திருவிழா வருகிற 23 மற்றும் 24&ந் தேதிகளில் நடைபெறுகிறது. இதனை முன்னிட்டு ஆலோசனை கூட்டம் பெருமாள் கோவில் வளாகத்தில் நடைபெற்றது.

இதில் மாநகராட்சி மேயர் தினேஷ்குமார் மற்றும் மாவட்ட அறங்காவல் குழு உறுப்பினர் ஆடிட்டர் முத்துராமன், அறங்காவல் குழு தலைவர் சங்கு சுப்பிரமணியம், கோவில் அறங்காவல் குழு உறுப்பினர்கள் சிம்கோ சம்பத், பிருந்தா, பரமசிவம், கார்த்திகேயன் மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.

இதில் தேர்த்திருவிழாவை சிறப்பாக நடத்துவது, தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்வது குறித்து ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டது.

Tags:    

Similar News