நிவாரண பொருட்கள் அனுப்பி வைத்த வால்பாறை எம்.எல்.ஏ

10 லட்சம் மதிப்பிலான நிவாரண பொருட்கள் அனுப்பி வைத்த வால்பாறை எம்.எல்.ஏ!

Update: 2023-12-23 17:49 GMT

10 லட்சம் மதிப்பிலான நிவாரண பொருட்கள் அனுப்பி வைத்த வால்பாறை எம்.எல்.ஏ!

பொள்ளாச்சி: தமிழகத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்பு சென்னை மற்றும் தென் மாவட்டங்களில் கன மழை பெய்ததின் காரணமாக வெள்ளம் ஏற்பட்டு பொதுமக்களின் அன்றாட வாழ்க்கை பாதிக்கப்பட்டது.இதனை அடுத்து மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு பல்வேறு தரப்பினரும் வெள்ள நிவாரண பொருட்களை அனுப்பி வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக வால்பாறை சட்டமன்ற உறுப்பினர் அமுல் கந்தசாமி தலைமையில் ரூபாய் 10 லட்சம் மதிப்பீட்டில் மளிகை பொருட்கள்,தேங்காய்,வாட்டர் பாட்டில் மற்றும் அத்தியாவசிய பொருட்கள் உள்ளிட்டவை தூத்துக்குடிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
Tags:    

Similar News