வானதி சீனிவாசன் கே.பி.இராமலிங்கத்தை ஆதரதித்து பிரச்சாரம் !

ராகுல் காந்திகே பிரதமராவார் என்ற நம்பிக்கை இல்லை - வானதி சீனிவாசன் கே.பி.இராமலிங்கத்தை ஆதரதித்து பிரச்சாரம் மேற்கொண்டார்.

Update: 2024-04-13 10:21 GMT

வானதி சீனிவாசன்

ராகுல் காந்திகே பிரதமராவார் என்ற நம்பிக்கை இல்லை - வானதி சீனிவாசன் கே.பி.இராமலிங்கத்தை ஆதரதித்து பிரச்சாரம். ராசிபுரம் அருகே குருசாமிபாளையம் பாவடி பகுதியில் பாஜக., வேட்பாளர் கே.பி.இராமலிங்கத்தை ஆதரித்து வானதி சீனிவாசன் வாக்கு சேகரித்தார். நாமக்கல் மக்களவை தொகுதியில் பாஜக., சார்பில் வேட்பாளராக கே.பி. இராமலிங்கம் போட்டியிடுகிறார். இவரை ஆதரித்து, நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்த குருசாமி பாளையம் பாவடி பகுதியில் வானதி சீனிவாசன் திறந்த வெளி ஜீப்பில் பொதுமக்களிடம் வாக்கு சேகரித்தார். அப்போது, அவர் பேசியதாவது: கோடிக்கணக்கான மக்களின் அடிப்படை தேவைகளை திட்டங்கள் வாயிலாக வீடுகளுக்கு கொண்டு சேர்த்தவர் பாரத பிரதமர் மோடி. ஓட்டு போடாத தமிழ்நாட்டுக்கு 11 லட்சம் கோடிகளை இந்த 10 ஆண்டுகளில் கொடுத்தவர் பாரத பிரதமர் மோடி. மோடி தான் பிரதமர் என்பதை இந்திய நாட்டு மக்கள் ஏற்கனவே முடிவு செய்துவிட்டனர். ராகுல் காந்திக்கே பிரதமர் ஆவார் என்ற நம்பிக்கை இல்லை. மத்திய அரசின் திட்டங்கள் (நிதி) நமக்கு வராமல் நேரடியாக மக்களுக்குச் செல்வதால் ஸ்டாலின் வயிற்தெரிச்சலில் உள்ளார். கே.பி.இராமலிங்கம் அரசியல் அனுபவம் வாய்ந்தவர். இந்த பகுதி மக்களுக்கு என்ன வேண்டும் என்பதைத் தெரிந்தவர். அவர் வெற்றி பெற்றால் பாரத பிரதமரிடம் என்ன வேண்டும் என்பதை கேட்டு பெற்றுத்தரும் வல்லமை படைத்தவர். என புகழாரம் சூட்டினார். மேலும் இந்த பிரச்சாரத்தின் போது பாஜக நிர்வாகிகள், மாவட்ட நிர்வாகிகள் சத்தியமூர்த்தி, சுகன்யா , வடிவேல், ராஜேஷ், தமிழரசு, மற்றும் கூட்டணி கட்சிகளான அமமுக, பாமக, உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News