கிராம நிர்வாக அலுவலர் மாயம்

செய்யாறு அருகே கிராம நிர்வாக அலுவலர் மாயமான சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Update: 2024-05-09 13:38 GMT

கிராம நிர்வாக அலுவலர் மாயம்

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு பகுதியை சேர்ந்தவர் செந்தில்குமார் (வயது 30) கிராம நிர்வாக அலுவலர்.இவரது மனைவி சபிதா. கணவன்-மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் கோபமடைந்த செந்தில்குமார் என்னை தேட வேண்டாம் என கடிதம் எழுதி வைத்துவிட்டு வீட்டை விட்டு சென்றுள்ளார். இதுகுறித்து மனைவி சபிதா செய்யாறு காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News