விடுதலை சிறுத்தைகள் கட்சி மண்டல செயற்குழு கூட்டம்

Update: 2023-11-29 06:19 GMT


செயற்குழு கூட்டம்


இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
 பெரம்பலூரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நேற்று இரவு விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மண்டல செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இதில் கடலூர், திருச்சி, பெரம்பலூர், அரியலூர் மற்றும் கரூர் உள்ளிட்ட மாவட்டங்களை உள்ளடக்கிய மண்டலத்தில் உள்ள அனைத்து மாவட்ட செயலாளர்கள், மாநில மாவட்ட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டு பேசினர். கூட்டத்தில் இறுதியாக பேசிய அக்கட்சியின் தலைவர் திருமாவளவன், திருச்சியில் வருகின்ற டிசம்பர் மாதம் 23ஆம் தேதி, சனாதனத்தை ஒழித்து ஜனநாயகத்தை வெற்றி பெற செய்து, நாட்டையும் நாட்டு மக்களையும் நல்வழிப்படுத்திட 'வெல்லும் ஜனநாயக மாநாடு' நடைபெற உள்ளதால் இந்த மண்டலத்திற்குட்பட்ட மாவட்ட செயலாளர், மண்டல பொறுப்பாளர்கள் மாநில நிர்வாகிகள் என அனைவரும் திரளான கட்சியினரையும் பொதுமக்களையும் பெண்களையும் அழைத்து வரவேண்டும். அவ்வாறு அழைத்து வரும்பொழுது அவர்களுக்கு உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்வதோடு கட்டுப்பாட்டுடன் அனைத்து தொண்டர்களும் மாநாட்டிற்கு வந்து செல்ல ஏற்பாடு செய்ய வேண்டும் என்று தெரிவித்தார். தொடர்ந்து பேசிய அவர், சுவரொட்டிகள் மூலமாகவும், விளம்பர பதாகைகள் மூலமாகவும் சமூக வலைதளங்களிலும் மாநாட்டிற்கான விளம்பரங்களை செய்து பொதுமக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும் என்றார். மேலும் மாநாட்டிற்கு தேவையான நிதியினை கட்சி நிர்வாகிகளும் தொண்டர்களும் திரளாக வழங்கிட வேண்டும் என்றும் அவர் வேண்டுகோள் விடுத்தார். நிகழ்ச்சியில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாநில, மண்டல, மாவட்ட நிர்வாகிகள் செயற்குழு உறுப்பினர்கள் திரளாக கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News