வீரபாண்டி ஆறுமுகம் பிறந்த நாள் விழா கட்சியினர் கலந்து கொள்ள டாக்டர் ஆ.பிரபு அறிக்கை

வீரபாண்டி ஆறுமுகம் பிறந்த நாள் விழா கட்சியினர் கலந்து கொள்ள டாக்டர் ஆ.பிரபு அறிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Update: 2024-01-25 01:58 GMT

பைல் படம்



சேலம் கிழக்கு மாவட்ட தி.மு.க. இளைஞரணி அமைப்பாளர் டாக்டர் வீரபாண்டி ஆ.பிரபு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- சேலம் மாவட்ட முன்னாள் தி.மு.க. செயலாளரும், முன்னாள் அமைச்சருமான நமது குடும்ப தலைவர் வீரபாண்டி ஆறுமுகம் பிறந்த நாள் நாளை (வெள்ளிக்கிழமை) சேலம் மாவட்டம் முழுவதும் கொண்டாடப்படுகிறது.

நாளை காலை 8.30 மணிக்கு மாவட்ட தி.மு.க. தலைமை அலுவலகமான கலைஞர் மாளிகையில் வீரபாண்டி ஆறுமுகம் உருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இதில் கட்சியின் அனைத்து பிரிவு நிர்வாகிகளும் திரளாக கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News