விஜயகாந்த் மறைவு: பா.ஜ.,வினர் அஞ்சலி

விஜயகாந்த் மறைவை முன்னிட்டு, அவர் பிறந்த ஊரான அருப்புக்கோட்டை, ராமானுஜபுரத்தில் பாஜ., சார்பில் அஞ்சலி செலுத்தப்பட்டது.

Update: 2023-12-29 14:27 GMT

விஜயகாந்த் மறைவை முன்னிட்டு, அவர் பிறந்த ஊரான அருப்புக்கோட்டை, ராமானுஜபுரத்தில் பாஜ., சார்பில் அஞ்சலி செலுத்தப்பட்டது.

தேமுதிக கட்சியின் நிறுவனத் தலைவர் விஜயகாந்த் சென்னையில் நேற்று உயிர் இறந்தார். உடல் நலக் குறைவால் உயிர் இழந்த அவருக்கு பல்வேறு தரப்பட்ட மக்கள் அஞ்சலி செலுத்தி வரும் நிலையில், விஜயகாந்த் பிறந்த ஊரான விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே இராமானுஜபுரம் கிராமத்தில் பாஜக மாநில பொதுச் செயலாளர் பேராசிரியர் இராம ஶ்ரீநிவாசன் தலைமையில் பாஜகவினர் அஞ்சலி செலுத்தினர். இந்த நிகழ்ச்சியில் பாஜக கிழக்கு மாவட்ட தலைவர் பெட்டகன் ஜி பாண்டுரங்கன் உட்பட ஏராளமான பாஜகவினர் கலந்து கொண்டு விஜயகாந்த் உருவப் படத்திற்கு மாலை அணிவித்தும் மலர் தூவியும் அஞ்சலி செலுத்தினர்.
Tags:    

Similar News