விஜயகாந்த் மறைவு: அனைத்து ரசிகர் கூட்டமைப்பினர் அமைதி பேரணி

பெரம்பலூரில் விஜயகாந்த் மறைவையொட்டி, அனைத்து நடிகர், ரசிகர் நற்பணி இயக்கங்களின் கூட்டமைப்பினர் அமைதி பேரணி நடத்தினர்.

Update: 2023-12-30 05:11 GMT

தேமுதிக தலைவர் விஜயகாந்த் உடல் நலக்குறைவால் டிசம்பர் 28ம் தேதி உயிரிழந்தார். இந்நிலையில் தமிழகம் முழுவதும் தேமுதிக தொண்டர்கள், பொதுமக்கள், ரசிகர்கள் தங்களுடைய அஞ்சலி செலுத்திவரும்நிலையில், டிசம்பர் 29ம் தேதி மாலை அவரது உடல் அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்ட நிலையில், பெரம்பலூர் மாவட்ட அனைத்து நடிகர், ரசிகர் நற்பணி இயக்கங்களின் கூட்டமைப்பு சார்பில். இன்று மாலை பெரம்பலூர் பாலக்கரை பகுதியில் இருந்து புதிய பேருந்து நிலையம் வரை அமைதி ஊர்வளம் சென்று புதிய பேருந்து நிலையத்தில். அங்கு வைக்கப்பட்ட விஜயகாந்த் திருவுருவப்படத்திற்கு ரசிகர்கள், இளைஞர்கள் பொதுமக்கள் என பலரும் மலர் தூவி மரியாதை செலுத்தி கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினார்கள்.

இந்நிகழ்ச்சியின் போது, ரஜினி ரசிகர் மன்ற மாவட்ட தலைவர் சண்முக தேவன், கமல் ரசிகர் மன்ற தலைவர் முத்துக்குமார், விஜய் ரசிகர் மன்ற தலைவர் சிவக்குமார், அஜித் ரசிகர் மன்ற தலைவர் சந்தோஷ், விஷால் ரசிகர் மன்ற தலைவர் ரமேஷ், கார்த்திக் ரசிகர் மன்ற தலைவர் நீலமேகம், உள்ளிட்ட பல்வேறு ரசிகர் மன்றத்தைச் சேர்ந்த நிர்வாகிகள் உறுப்பினர்கள் இளைஞர்கள் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News