செந்தியம்பலத்தில் கிராமத்து விளையாட்டு போட்டிகள்

செந்தியம்பலத்தில் புத்தாண்டை முன்னிட்டு கிராமத்து விளையாட்டு போட்டிகள் நடைபெற்றது.

Update: 2024-01-03 05:47 GMT

கிராமத்து விளையாட்டு போட்டிகள் 

தூத்துக்குடி சேர்வைக்காரன்மடம் அருகேயுள்ள செந்தியம்பலம் வாதிரியார் இளைஞர் சங்கம் தாய்வழி யேழுகிளை வம்சம் கொண்டவர்கள் சார்பாக 38 வது ஆண்டு புத்தாண்டு விளையாட்டு போட்டி முன்று நாள் நடைபெற்றது, கிரிக்கெட் ரவுண்டுரேஸ் பேப்பர் நடனம், சிலம்பம் கயிறு இழுத்தல் கிராமத்து விளையாட்டுகள் நடைபெற்றது. மற்றும் தமிழ்அறிஞர் க.பா. சந்தோசம் வாதிரி நினைவு பேச்சுபோட்டி கட்டுரைபோட்டி நடைபெற்றது.

விழாவிற்கு சிறப்பு விருந்தினர் சேர்வைகாரன் மடம் பஞ்சாயத்து தலைவர் ஜெபக்கனி மற்றும் முன்னாள் பஞ்சாய்த்துதலைவர் ஞானசேகர் கலந்து கொண்டு பரிசு வழங்கின. சென்னை, இலங்கை, கோவை, பெங்களூர், பாம்பே, நெல்லை, சேலம், வள்ளியம்மாள்புரம், தருவைகுளம், வேப்பலோடை, தூத்துக்குடி, துபாய் போன்ற இடங்களில் இருந்து குடும்பமாய் வந்து விளையாட்டு போட்டி கண்டு களித்தனர். நிகழ்ச்சியை செந்தியம்பலம் வாதிரியார் இளைஞர் சங்கம் நிர்வாகிகள் செய்தனர்..

Tags:    

Similar News