கிராம மக்கள் சாலைமறியல்

ஆத்தூர் அருகே கிராம மக்கள் சாலைமறியல்

Update: 2024-02-03 09:24 GMT

சாலைமறியல்

கெங்கவல்லி: ஆத்தூர் அருகே வளையமாதேவி கிராமத்தில் ஒரு பிரிவினர் வசிக்கும் பகுதியில் மற்றொரு பிரிவினருக்கு பட்டா வழங்கி இருப்பதாகவும், அவர்கள் அங்கு கட்டிடம் கட்டி வருவதாகவும் கூறப்படுகிறது. இதனால் அந்த பகுதிக்கு செல்ல இடையூறாக இருப்பதாக அந்த பகுதி மக்கள் நேற்று காலை ஆத்தூர் வளையமாதேவி சாலையில் திடீரென சாலைமறியலில் ஈடுபட் டனர். தகவல் அறிந்த ஆத்தூர் தாசில்தார் (பொறுப்பு) வரத ராஜன் மற்றும் போலீசார் விரைந்து வந்து சாலைமறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அதன்பிறகு அவர்கள் கலைந்து சென்றனர்.
Tags:    

Similar News