வன்கொடுமை தடுப்பு கண்காணிப்பு குழு கூட்டம்

நாகர்கோவிலில் வன்கொடுமை தடுப்பு கண்காணிப்பு குழு கூட்டம் நடைபெற்றது.

Update: 2024-06-30 13:23 GMT

வன்கொடுமை தடுப்பு கண்காணிப்பு குழு கூட்டம்

கன்னியாகுமரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் உள்ள சிறு கூட்டங்கள் கன்னியாகுமரி மாவட்டத்தில் 2024 ஆம் ஆண்டு காலாண்டுக்கான மாவட்ட அளவிலான வன்கொடுமை தடுப்பு மற்றும் கண்காணிப்பு குழு கூட்டம், ஆதிதிராவிடர் நல குழு கூட்டம், மனித கழிவுகளை மனிதர்களை அகற்றுதல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு குழு கூட்டம் மற்றும் பற்றாளர் கூட்டம் ஆகிய கூட்டங்கள் கலெக்டர் தலைமையில்  நடைபெற்றது.       இந்த கூட்டத்தில் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட வழக்குகள் தொடர்பாக ஆய்வு செய்யப்பட்டது.

ஆதிதிராவிடர் நலக்குழு உறுப்பினர்கள் அளித்துள்ள கோரிக்கையின் பெயரில் விவாதிக்கப்பட்டு சம்பந்தப்பட்ட அலுவலர்களால் பதில் அளிக்கப்பட்டது.     மனிதக் கழிவுகளை மனிதர்களை அகற்றுதல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு குழு மற்றும் உறுப்பினர்களிலும் கொடுக்கப்பட்ட கோரிக்கையில்  சம்பந்தப்பட்ட அலுவலர்கள் பதிலளித்தனர்.

கூட்டத்தில் காவல்துறை உயர் அலுவலர்கள் மற்றும் மாவட்ட அலுவலகங்கள் குழு உறுப்பினர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News