விராலிமலை உரக்கடை உரிமம் தற்காலிக ரத்து!

விராலிமலை உரக்கடையில் தவறான பூச்சிக்கொல்லி மருந்து வழங்கப்பட்டதாக அக்கடையின் உரிமம் ரத்து செய்யப்பட்டுள்ளது.

Update: 2024-03-30 05:06 GMT
விவசாய வேளாண் பயிருக்கு தவறான பூச்சி மருந்து வழங்கிய உரக்கடை உரிமம் தற்காலிக ரத்து செய்யப்பட்டுள்ளது. திருச்சி மாவட்டம், மணப்பாறை மறவனூர் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி செந்தில் விராலிமலை தனியார் மருந்து கடையில் வாங்கிய பூச்சிக் கொல்லி நெற்பயிரில் தெளித்தபோது 8 ஏக்கர் நெற்பயிர் காய்ந்து விட்டதாம். இதுகுறித்து வேளாண்மை அதிகாரிகளிடம் புகார் கொடுத்தனர்.இதையடுத்து விவசாயிகள் மாவட்ட ஆட்சியரிடம் முறையிட்டு, விராலிமலை வேளாண் துறை அலுவலகம் முன் போராட்டம் நடத்தியதை அடுத்து ஆட்சியரின் அறிவுறுத்தலின் பேரில் உரக்கடையின் தற்காலிக உரிமம் ரத்து செய்யப்பட்டு, கடையை பூட்டி வேளாண்மைத் துறையினர் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.
Tags:    

Similar News