காலை உணவு திட்டம் குறித்து மாவட்ட ஆட்சியர் ஆய்வு

விருதுநகர் மாவட்டம், துலுக்கப்பட்டி ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் காலை உணவு திட்டம் குறித்து மாவட்ட ஆட்சியர் ஆய்வு மேற்கொண்டார்.

Update: 2024-06-12 02:08 GMT

காலை உணவு திட்டம் குறித்து ஆய்வு 

தமிழகத்தில் பள்ளிக்கு வரும் மாணவர்களின் பசியை போக்குவதற்காக தமிழக அரசு காலை உணவு திட்டத்தை அமல்படுத்தி வருகிறது இதன்படி தமிழகம் முழுவதும் உள்ள பள்ளிகளில் காலை உணவு திட்டத்தின் கீழ் மாணவர்களுக்கு உணவுகள் வழங்கப்பட்டு வருகின்றனர் விருதுநகர் மாவட்டம், துலுக்கப்பட்டி ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் முதலமைச்சரின் காலை உணவுத்திட்டத்தின் செயல்பாடுகள், வழங்கப்படும் உணவுகள், அதன் தரம் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் ஜெயசீலன், ஆய்வு செய்து, மாணவர்களுடன் அமர்ந்து உணவருந்தினார்.
Tags:    

Similar News